Tuesday, May 31, 2005

முயற்சி கதை - 2

ரெண்டு தவளைங்க குதிச்சு குதிச்சு பொய்க்கிட்டு இருந்தது. அப்படியே விளையாட்டா தாவும்போது ரெண்டு தவளையும் ஒரு தயிர் பானைக்குள்ள விழுந்துடுச்சுங்க.

ஒரு அஞ்சு பத்து நிமிஷம் ரெண்டு தவளையும் பானைக்குள்ளேயிருந்து வெளிய குதிக்க முயற்சி செஞ்சுதுங்க. ஆனாலும் உடனே அது முடியலை. ஒரு தவளை நம்பிக்கை இழக்க ஆரம்பிச்சு நீந்துவதை நிறுத்திருச்சு. தயிருக்குள்ள மூழ்கிப்போச்சு!

ரெண்டாவது தவளை முயற்சிய கைவிடலை. எப்படியும் வெளியெ போயிடலாம்னு நீந்திக்கிட்டெ இருந்தது. அது கொஞ்சம் மூச்சு வாங்கி ஓய்வு எடுக்கணும்னு நெனைச்ச சமயத்துல ஒரு ஆச்சரியம் நடந்தது.

இவ்ளொ நேரமா நீந்துனதால வெண்ணெய் திரண்டு மிதந்துக்கிட்டு இருந்தது! அது மேல் ஏறி உக்காந்துகிச்சு. அப்புறமா, அங்கெயிருந்து ஒரே தாவுல வெளிய குதிச்சிடுச்சி!

முயற்சிதான் காரணம்!!

1 comment:

NambikkaiRAMA said...

வணக்கம் அன்பரே! உங்கள் முயற்சி கதைகளை மிகவும் ரசித்தேன். முயற்சி நிச்சயம் திருவினை ஆக்கும்.உங்களைப் போன்ற சிந்தனைக் கொண்டோரைத்தான் எங்களது "நம்பிக்கை" கூகுள் குழுமம் தேடிக்கொண்டு இருக்கிறது. உங்கள் படைப்பை நீங்கள் அதிலும் தரலாமே.